Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுக்கோட்டை,மார்ச்.13: திருமயம் ஒன்றியம் ராங்கியம் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 கோடியே 44 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சுகாதார நிலைய கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்துவைத்தார்.இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன்,
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர்.எஸ்.ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள் இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா.
இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா முன்னாள் அரசு வழக்கறிஞர்,வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் செல்வபாண்டியன்,கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை வருவாய் கோட்டாட்சியர்,சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஒன்றியக் கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.